புயல் பாதுகாப்பு மையங்களில் ஊரக தொழில்துறை அமைச்சர் பி. பெஞ்சமின் ஆய்வு

நாகை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் 

நாகை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பி. பெஞ்சமின் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கஜா புயல் சீற்றத்தால் குடியிருப்புகள் மற்றும் உடைமைகளை இழந்த மக்கள், பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கீழையூர் ஊராட்சி ஒன்றியம், வேட்டைக்காரனிருப்பு மற்றும் நாட்டான்காடு பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தமிழக அமைச்சர் பி. பெஞ்சமின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உணவுப் பொருள்களை ஆய்வுசெய்த அவர், பொதுமக்களுக்கு அவற்றை பரிமாறினார். ஆய்வின்போது, அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com