கோயில் குளங்களில் நீர் நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக முடிவு

சீர்காழி வட்டத்தில் உள்ள கோயில் குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டத்தில் உள்ள கோயில் குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார். 
சீர்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரம் சிவலோகத் தியாகராஜர் கோயில் திருக்குளத்தை பாஜக மாவட்டத் தலைவர் ஜி. வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்வளவன், ஒன்றியச் செயலர் நேதாஜி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, மாவட்டத் தலைவர் வெங்கடேசன் கூறியது: ஆச்சாள்புரம் சிவலோகத் தியாகராஜர் கோயிலுக்கு யிலுக்கு சொந்தமாக 360 ஏக்கர் நிலம் உள்ளது. இக்கோயிலின் திருக்குளம் 3 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கொள்ளிடம் ஆற்றிலும், ராஜன் வாய்க்காலிலும் தண்ணீர் சென்று கொண்டிருந்தாலும்  கிராமங்களில் உள்ள கிளை வாய்க்கால்கள் தூர்வாராமல் உள்ளது. 
இதனால் கோயில் குளங்களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. ஆச்சாள்புரம் கோயில் குளத்திற்கு கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணிர் வந்து சிறு குட்டைகளில் நிரப்பப்பட்டு குட்டைகளிலிருந்து குழாய் மூலம் குளத்துக்கு அனுப்பவும் தண்ணீர் குளத்திலிருந்து வெளியேறி நிலங்களுக்கு சென்று சேர வசதியும் உள்ளது. கிளை வாய்க்கால்கள் தூர்வாரவில்லை என்பதால், குளங்களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை . இதேபோல், இப்பகுதியில் பல்வேறு கோயில் குளங்கள் நீரின்றி வறண்டு கிடக்கிறது.
நிலத்தடி நீரை பாதுகாக்கவும் குடிநீரை எளிதில் பெறும் வகையிலும் கோயில் குளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதியைச் சேர்ந்த அனைத்து கோயில் குளங்களிலும் தண்ணிர் சென்று  சேரும் வகையில்  கிளை வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com