பிரதமர் நரேந்திர மோடியின் 68 -ஆவது பிறந்த நாள் விழாவானது, நாகை மாவட்டம், மயிலாடுதுறை அன்பகம் மாற்றுத் திறனாளி குழந்தைகள் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அன்பகம் பள்ளியில் ஒன்றிணைந்த பாஜகவினர், கேக் வெட்டிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
மயிலாடுதுறை நகர பாஜக தலைவர் மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் நாகை வடக்கு மாவட்டத் தலைவர் ஜி. வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவி. சேதுராமன், நாகை மாவட்டப் பொதுச் செயலாளர் நாஞ்சில் பாலு, இளைஞரணி மாவட்டப் பொதுச் செயலாளர் பாரதிகண்ணன், எஸ்.சி. பிரிவு நாகை மாவட்டத் தலைவர் டி. ஈழவேந்தன், நகர பொதுச் செயலாளர் மயில் (எ) ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.