கலைஞர் விருதுபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழா

கலைஞர் விருதுபெற்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் பி. கல்யாணத்துக்கு குத்தாலத்தில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கலைஞர் விருதுபெற்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் பி. கல்யாணத்துக்கு குத்தாலத்தில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திமுக சார்பில் விழுப்புரத்தில் செப். 15-ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், தலைமை தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான குத்தாலம் பி. கல்யாணத்துக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவருக்கு நாகை மாவட்டம், குத்தாலத்தில் துபை தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் சார்பில், பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் ஏ. அசரப் அலி தலைமை வகித்தார். இதில், முன்னாள் எம்.பி. எல். கணேசன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இரா.தி. சபாபதிமோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொணடு வாழ்த்திப் பேசினர். குத்தாலம் பி. கல்யாணம் ஏற்புரை நிகழ்த்தினார். இதில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், அண்ணாதுரை, பேரூர் திமுக செயலாளர் சம்சுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com