மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் அமைந்துள்ள ரிஷப தீர்த்த நந்திக்கு சனிப் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
நந்திகேசுவரர் வார வழிபாட்டு மன்றத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். காவிரியில் தண்ணீர் செல்வதால், ரிஷப தீர்த்த நந்தி சன்னிதியின் முன்பு தெப்பம் அமைத்து, சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு மேற்கொண்டர்.
இதில் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் என்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் வழிபாட்டு மன்றத்தினர் பங்கேற்றனர்.