அரசுப் பேருந்தை சேதப்படுத்த முயன்றவர் கைது

நாகையில் அரசுப் பேருந்தை சேதப்படுத்த முயன்றவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

நாகையில் அரசுப் பேருந்தை சேதப்படுத்த முயன்றவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் உத்தரவின் பேரில், போலீஸார் வெளிப்பாளையம்  அண்ணாசிலை பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது,  அரசுப் பேருந்து மீது  கல்வீசி  சேதப்படுத்த முயன்றவரைப் பிடித்து விசாரித்ததில் அந்த நபர்  நாகை தாமரைக்குளம்  தென் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (26) என்பதும், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மாரியப்பனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com