பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீர்: நோய் பரவும் அபாயம்

சீர்காழி அருகே புத்தூரில் பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


சீர்காழி அருகே புத்தூரில் பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே புத்தூர் கடைவீதியையொட்டி பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் கடுக்காமரம், புத்தூர், திருமயிலாடி உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாகத் திகழ்கிறது. 
இந்த வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாததால், வாய்க்காலின் பெரும்பகுதி மூடிக் கிடக்கிறது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது.
மேலும், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் சாக்கடை நீரும் ஒன்றாகக் கலந்து மாதக்கணக்கில் தேங்கிக்கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
இந்தக் கழிவுநீரிலிருந்து வீசும் துர்நாற்றத்தால், அப்பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுகின்றனர். பல வகையான நெகிழிப் பொருள்கள் இந்த சாக்கடை நீரில் தேங்கிக் கிடக்கிறது. எனவே, சுற்றுபுறத்தைப் பாதிக்கும் சாக்கடை நீரை அகற்றி, இந்த வாய்க்காலை 5 கிலோ மீட்டர் தூரத்துக்குத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com