நாகை மாவட்டம், வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 500 பேருக்கு சூரிய சக்தி மின் விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
அமெரிக்காவில் செயல்படும் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு மற்றும் தேனி மாவட்ட தொண்டு நிறுவனம் இணைந்து சூரிய சக்தி மின் விளக்குகளை வழங்கின. கஜா புயலால் மாணவியரின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தேர்வு நேரத்தில் படிப்பதற்கு உதவியாக இந்த சூரிய சக்தி மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.