மயிலாடுதுறை பகுதியில் ஜனவரி 22 மின்தடை

மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்புப்

மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன. 22) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை. முத்துக்குமரன் விடுத்த செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை, மணக்குடி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இதன்மூலம் மின்விநியோகம் பெறும் மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கைநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், வழுவூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com