மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன. 22) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை. முத்துக்குமரன் விடுத்த செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை, மணக்குடி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இதன்மூலம் மின்விநியோகம் பெறும் மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கைநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், வழுவூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.