பௌர்ணமியையொட்டி, திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாழையொண்கண்ணி சமேத இருதய கமலநாத சுவாமிக்கும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் பால், பன்னீர், இளநீர், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.