தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தொழில் முனைவு உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வணிக மேலாண்மைத் துறை சார்பில், இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில், முற்றிலும் மாணவர்களே உணவு தயார் செய்து விற்பனை செய்யும் வகையில் இத்திருவிழா நடைபெற்றது.
கல்லூரி செயலர் மா.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சி.சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கருணா. சேகர் விழாவைத் தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை சுயநிதிப்பிரிவு பொறுப்பாசிரியர் கோ.செளந்தரராஜன், துறைத் தலைவர் ஜி.திலகா, உதவிப் பேராசிரியர்கள் கே.சித்ரா, எஸ்.கார்த்திக், பி.எஸ்.காயத்ரி மற்றும் துறை மாணவர்கள் செய்திருந்தனர்.