பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார். இதில் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குல்ருக் ஹஸ்மி, ஞானமணி ஆகியோர் பங்கேற்று, ஊட்டச்சத்து குறித்து சிறப்புரையாற்றினர்.
இதில் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் ஜோசப் பன்னீர்தாஸ், இளஞ்செழியன், கவிதா மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.