திருக்குவளையை அடுத்த வலிவலத்தில் பொதுக் கழிவறையை முறையாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வலிவலம் பெருமாள் கோயில் வீதியில் அமைந்துள்ள இலவச பொதுக் கழிவறை ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் ஒக்கி புயலின்போது கட்டப்பட்டது. தற்போது, இந்த கழிவறை முறையான பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதைப் பார்வையிட்ட ஊராட்சி செயலர் அருண்குமார், கழிவறையைப் பொதுமக்கள் தகுந்த முறையில் பராமரித்து பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.