கிங் ஃபிஷர் நிறுவனத்துக்கு சொந்தமான 2 செயலிழந்த ஹெலிகாப்டர்கள் ரூ. 8. 5 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
கடன் சுமையில் சிக்கி தவித்த கிங் ஃபிஷர் நிறுவனத்தை மீட்டெடுக்க ரூ. 9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.
கடன் தொகையை திரும்பப் பெறும் பொருட்டு, அவரது நிறுவனத்துக்கு சொந்தமான 2 ஏர்பஸ் ஹெலிகாப்டர்கள் புதன்கிழமை பெங்களூரில் இணைய வழி ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஏலத்தை கடன் மீட்பு தீர்ப்பாயம் நடத்தியது. அந்த ஹெலிகாப்டர்களை தில்லியைச் சேர்ந்த செளதரி விமான நிறுவனம் ரூ. 8. 57 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.