பிளாஸ்டிக்  தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லி சமய்ப்பூர் பாத்லி தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 

தில்லி சமய்ப்பூர் பாத்லி தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்ததாவது: 
சமய்ப்பூர் பாத்லி தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை 7.20 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. 
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 40 நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com