சகோதரி மானபங்கம்: நண்பரை குத்திக் கொன்ற இளைஞர் போலீஸில் சரண்

தனது மூத்த சகோதரியை மானபங்கம் செய்த நண்பரை இளைஞர் ஒருவர் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தனது மூத்த சகோதரியை மானபங்கம் செய்த நண்பரை இளைஞர் ஒருவர் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தெற்கு தில்லி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரும்,  அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு  இளைஞரும் நெருங்கிய தோழர்கள்.  சிறு வயதிலிருந்தே இருவரும் அன்பாகப் பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று தனது நண்பரின் வீட்டுக்குச் சென்ற  இளைஞர் மோஹித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது நண்பரை பெற்றோர் கண்முன் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து, காயமடைந்த மகனை அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்  உயிரிழந்தார். இதனிடையே மோஹித்தை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் மோஹித் அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 
அவர் போலீஸாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று தனது வீட்டுக்கு வந்திருந்த தனது நண்பர் இரவு உணவை முடித்துவிட்டு அங்கேயே தூங்கியதாகவும் நள்ளிரவில் தனது மூத்த சகோதரியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்து அவரது வீட்டுக்குச் சென்று அவரை கத்தியால் குத்தியதாகவும் கூறினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com