பெண் சடலம் கண்டெடுப்பு

மத்திய தில்லி, தரியாகஞ்சில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை கண்டுடெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மத்திய தில்லி, தரியாகஞ்சில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை கண்டுடெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மத்திய தில்லி காவல் துணை ஆணையர் மந்தீப் சிங் ரன்தாவா கூறியதாவது:  தரியாகஞ்ச் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண் சடலம் கிடப்பதாக அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கர் ஒருவர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, போலீஸார் உடனடியாக அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், யார், எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாகத்  தெரிய வரவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு, சடலம் இங்கு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அவரது சடலம் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com