திருவட்டாறு கோயிலில் விஷ்ணு சகஸ்ரநாப ஜெபம் தொடக்கம்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில்  விஷ்ணு சகஸ்ரநாப ஜெபம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில்  விஷ்ணு சகஸ்ரநாப ஜெபம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் அனைத்து ஏகாதசி நாள்களிலும் விஷ்ணு சகஸ்ரநாப ஜெபம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  
இந்நிலையில் கோயிலில் நடைபெற்று வரும் ஐப்பசித் திருவிழாவின் 5 ஆம் நாளான சனிக்கிழமை இந்த ஜெபம் தொடங்கியது. திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமி பாய் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். 
நிகழ்ச்சியில் அன்னபூரணி சேவா சங்க நிர்வாகிகள்  சி. அனந்தகிருஷ்ணன், டாக்டர் சந்திரமோகன், ஜெயஸ்ரீ, பரமேஸ்வரன் நாயர், விஸ்வமம்பரன், அனில்குமார், சுகுமாரன் நாயர் மற்றும் கோயில் மேலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com