குமரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் நாளை அம்மா திட்ட  முகாம்

குமரி மாவட்டத்தில் 4 வட்டங்களில்  அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.16) நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில் 4 வட்டங்களில்  அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.16) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தமிழக அரசின்  அம்மா திட்டத்தின் 5  ஆம் கட்ட சிறப்பு முகாம், அகஸ்தீசுவரம் வட்டத்தில் அகஸ்தீசுவரம் வருவாய் கிராமத்துக்கு அரசு தொடக்கப் பள்ளியிலும்,  தோவாளை வட்டத்தில் தாழக்குடி கிராமத்துக்கு   அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,  கல்குளம் வட்டத்தில் பேச்சிப்பாறை வருவாய் கிராமத்துக்கு  பேச்சிப்பாறை கிராம ஊராட்சி அலுவலகத்திலும்,  விளவங்கோடு வட்டத்தில் நல்லூர் வருவாய் கிராமத்துக்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும்  காலை 10 மணிக்கு  நடைபெறவுள்ளது.
இம்முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்துக்குள்பட்ட நில பிரச்னைகள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com