மார்த்தாண்டத்தில் ரோபோட்டிக் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மார்த்தாண்டம் விபுரோ டெக்னாலஜிஸ் கல்வி நிறுவனம் மற்றும் வானம் பவுண்டேசன் அமைப்பு இணைந்து, முன்னாள் பிரதமர் நேரு பிறந்த தினத்தையொட்டி ரோபோட்டிக் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதன் நிறைவு விழாவில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பேசினார்.
வானம் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எல். எட்வின்சாம், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜோபிரகாஷ் ஆகியோர் பேசினர். விபுரோ நிறுவன இயக்குநர் வி.வி. வினோத் நன்றி கூறினார்.