70 கிலோ ரப்பர் சீட் திருட்டு: ஒருவர் கைது

வேளிமலை பகுதியிலுள்ள ரப்பர் தோட்ட கிடங்கிலிருந்து 70 கிலோ உலர்ந்த ரப்பர் சீட்டை திருடியதாக ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 

வேளிமலை பகுதியிலுள்ள ரப்பர் தோட்ட கிடங்கிலிருந்து 70 கிலோ உலர்ந்த ரப்பர் சீட்டை திருடியதாக ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
குலசேகரம் பாறைகாட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (56) . இவர் வேளிமலை பகுதியில் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ரப்பர் பயிரிட்டு, ரப்பர் பால் எடுத்து வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் 70 கிலோ உலர்ந்த ரப்பர் ஷீட்டை   தோட்டத்திலுள்ள கிடங்கில் வைத்து பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். புதன்கிழமை ரப்பர் சீட்டை எடுக்க வந்த போது, கிடங்கின் பூட்டு உடைக்கப்பட்டு, மர்ம நபர்கள் ரப்பர் சீட்டை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கொற்றிகோடு போலீஸார் வழக்குப் பதிந்து, குமாரபுரத்தைச் சேர்ந்த ஐயப்பனை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com