களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீபத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ. 16) பந்திருநாழி பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது.
இக்கோயிலில் மாதந்தோறும் தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை பந்திருநாழி பொங்கல் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், தேவி பாகவத பாராயணம், மதியம் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
மாலை 6.30 மணியளவில் முத்துக்குடை அணிவகுப்புடன் சுயம்பு எழுந்தருளல் நடைபெறுகிறது. தொடர்ந்து பொங்காலை களத்தில் பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.