அருமனை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த ராசையன் மனைவி சுசீலா (54). இவர் ஞாயிற்றுக்கிழமை முக்கூட்டுக்கல் குருவிளைப் பகுதியில் நடந்துசென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சுசீலா அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து சுசீலா, அருமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.