கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பஞ்சலிங்கபுரம், மகாராஜபுரம் ஊராட்சிப் பகுதி மக்களிடம் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. குறைகளைக் கேட்டறிந்தார்.
கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து குறைகள் மற்றும் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அகஸ்தீசுவரம் ஒன்றியத்துகுள்பட்ட பஞ்சலிங்கபுரம் மற்றும் மகராஜபுரம் ஆகிய ஊராட்சியில் மக்களை சந்தித்து மனுக்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலர் தாமரைபாரதி, மாவட்ட துணைச் செயலர் கே.முத்துசுவாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பிரேமலதா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரேம்ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.