களியக்காவிளை, மார்த்தாண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
இப்பகுதியில், கடந்த 3 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கிணறுகள், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை கொட்டியது. சுமார் அரை மணி நேரம் வரை பெய்த மழை, சிறிது நேர இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பரவலாக பெய்தது. மாலையில் லேசான மழை காணப்பட்டது. மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இப் பகுதியில் மழையால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.