நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்களுக்கு கொசு ஒழிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்சிக்கு கல்லூரி முதல்வர் லியாகத் அலி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். மண்டல பூச்சியியல் குழுவின் முதுநிலை பூச்சியியல் அலுவலர் கிருபா தலைமையிலான குழுவினர் மாணவர்களுக்கு பயிற்சிஅளித்தனர். பயிற்சியில், பேராசிரியர்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, மரிய ஜான், சாம் ஜெபா, லிட்வின் லூசியா, கார்த்திக், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ஜெயகுமார் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.