குலசேகரத்தில் கருணாநிதி நினைவு கொடிக்கம்பத்தில் திமுக கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
குமரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி. மனோதங்கராஜ் கொடியேற்றினார்.
நிகழ்ச்சியில், திருவட்டாறு ஒன்றியப் பொறுப்பாளர் ஜான்பிரைட், முன்னாள் அமைச்சர் கு. லாரன்ஸ், மாவட்ட துணைச் செயலர் ஐ.ஜி.பி. ஜான்கிறிஸ்டோபர், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், செயற்குழு உறுப்பினர் பே. ராஜேந்திரன், மேற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பீனா அமிர்தராஜ், புஷ்பலதா, குலசேகரம் பேரூர் செயலர் அலெக்சாண்டர், திற்பரப்பு பேரூர் செயலர் வழக்குரைஞர் பி. வின்சென்ட், மாவட்ட பிரநிதிகள் ஜோஸ் எட்வர்ட், லெனின், அலாவுதீன், அயக்கோடு வில்சன், சிறுபான்மை அணி நிர்வாகி அமானுல்லா, மீனவர் அணி நிர்வாகி ராபி, ஐ.டி. பிரிவு அணி நிர்வாகி வின்ஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்