புரட்டாசி பௌர்ணமி: காணிமடம் மந்திராலயத்தில் நிலாமுற்ற பூஜை

புரட்டாசி பெளர்ணமியை முன்னிட்டு காணிமடம் மந்திராலயத்தில் நிலாமுற்ற பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி பெளர்ணமியை முன்னிட்டு காணிமடம் மந்திராலயத்தில் நிலாமுற்ற பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்டம்,  அஞ்சுகிராமம் அருகே காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலயம் உள்ளது. இங்கு புரட்டாசி பெளர்ணமியை முன்னிட்டு, மந்த்ராலய குரு நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் தலைமையில் பௌர்ணமி பூஜை மற்றும் நிலாமுற்ற பூஜை  நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மாலை 6 மணிக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர், களபம்  உள்ளிட்ட பல்வேறு வாசனை  திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெளர்ணமி நிலவொளியில் இறைவனை வேண்டி தவம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com