தக்கலை அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், சாமியார்மடத்தை அடுத்த காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (48). இவர் திங்கள்கிழமை இரவு நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தக்கலை அமலா கான்வென்ட் அருகில் வரும்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாசம் (41) என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் ரஹீமை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.