கன்னியாகுமரி
சாலையில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஆரல்வாய்மொழியில் டிப்பர் லாரி மோதியதில் ஆல மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆரல்வாய்மொழியில் டிப்பர் லாரி மோதியதில் ஆல மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் - காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலையில், ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி கூட்டுறவு நூற்பாலை அருகிலிருந்து முப்பந்தல் வரை சாலையோரம் மிகவும் பழமையான ஆலமரங்கள் உள்ளன.
இந்நிலையில், கன்னியாகுமரி கூட்டுறவு நூற்பாலை அருகே சாலையோரம் நின்ற ஆலமரம் மீது டிப்பர் லாரி செவ்வாய்க்கிழமை மோதியதில் மரம் சாலையில் சாய்ந்தது.
இதனால் சாலையின் இரு பகுதியிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு வந்த ஆரல்வாய்மொழி போலீஸார், மது போதையில் இருந்த லாரியின் ஓட்டுநர் பூட்டேந்தி கல்லெடை பகுதியைச் சேர்ந்த ஏபெல் ராஜ்குமாரை கைதுசெய்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆலமரம் அகற்றப்பட்டது.