திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஆறாட்டு நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களின் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 10 ஆம் தேதி தொடங்கியது. இத்திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவில் மூவாற்று முகத்தில் சுவாமிக்கு ஆறாட்டு உற்சவம் நடைபெற்றது. முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆறாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.