நாகர்கோவிலில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட கட்டடப் பொறியாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் தலைவராக ஜே. ஜார்ஜ் ஜோசப், துணைத்தலைவராக எப்.ஜேசுராஜ், செயலராக எப்.லாரன்ஸ், பொருளாளராக ஜே.ஜெயகர், உதவிச் செயலராக எம்.செந்தில்தேவ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக ஏ.பினோதாஸ், ஏ.ராஜன், கே.கணேஷ்குமார், ஜே.டி.பிலோமின்தாஸ், சி.என்.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவினை வரும் மே 13 ஆம் தேதி நடத்துவது, இவ்விழாவுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி கட்டடப் பொறியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் முரளிகுமாரை அழைத்து நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.