குமரி அருகே இளைஞர் சடலம் மீட்பு

கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது சடலத்தைக் கைப்பற்றி போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது சடலத்தைக் கைப்பற்றி போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொற்றையடி பகுதியில் பணி நிறைவடையாத  நான்கு வழிச்சாலை அருகேயுள்ள முள்புதரில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இத்தகவல் அறிந்த  கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் முத்து மற்றும் போலீஸôர் அங்கு சென்று, அழுகிய நிலையில் கிடந்த அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீஸôர் கூறுகையில்,  இறந்து கிடந்த இளைஞர் முக்கால் அளவு பேண்ட் அணிந்திருந்தார். உடலில் காயம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டரா? என விசாரிக்கிறோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com