பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி சேவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி சேவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பிஎஸ்என்எல் நிறுவன அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள் வேலைநிறுத்த போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு, எயுஎபி தலைவர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். அதிகாரிகள் சங்க மாவட்டச் செயலர் ஆறுமுகம், செல்வராஜன், அதிகாரிகள் சங்க நிர்வாகி மணிகண்டன், ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜார்ஜ், மாவட்டச் செயலர் பி.ராஜு, மாநில உதவிச் செயலர் பி.இந்திரா, அகில இந்திய பொருளாளர் ராஜன், தொலைத்தொடர்பு துறை ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எ.செல்வம் ஆகியோர் பேசினர்.
ஊழியர்கள் போராட்டம் காரணமாக புதிய இணைப்பு, சிம்கார்டு விற்பனை, தொலைபேசி கட்டண வசூல் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com