கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் வட்டம், தேரூர் பேரூராட்சிக்கு மட்டும் மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் வியாழக்கிழமை ( பிப். 21) நடைபெறுகிறது.
தேரூர் கஸ்தூரிபாய் நடுநிலைப் பள்ளியில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ள இந்த முதற்கட்ட மனு நீதி முகாமில், பொதுமக்களிடமிருந்து அகஸ்தீசுவரம் தனி வட்டாட்சியர் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.