"இலவச  இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்'

நாட்டுப்புற கலைஞர்கள் இலவச இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புற கலைஞர்கள் இலவச இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் மு.க.சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தில், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2017-18  ஆம் ஆண்டிற்கான இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து உறுப்பினர் அட்டையை புதுப்பித்துள்ளவர்கள், மண்டல கலைப் பண்பாட்டு மையம்,   21, அரசு அலுவலர் ஆ குடியிருப்பு, திருநெல்வேலி, என்ற முகவரிக்கு பிப். 28  ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com