களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் கிராமிய விழிப்புணர்வு திட்ட இயக்கம் இணைந்து நடத்திய ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கம் பாத்திமாபுரத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் பிரமிளா தலைமை வகித்தார். சமூகப் பணித்துறை மாணவி ஆர்.ஜெ.ஜெனிபா வரவேற்றார். கிராமிய விழிப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.இருதயராஜ், பாத்திமாபுரம் பங்குப் பணியாளர் ஷைன், ஜீன்பால் , கிட்ஸ் பணியாளர் செலின் ஷீபா ஆகியோர் பேசினர். சமூகப் பணித்துறை மாணவி பி.எம்.மீனு நன்றி கூறினார். மாணவி கே.அஜிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.