நாகர்கோவிலில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது.
நாகர்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு, நகரச் செயலர் சந்துரு என்ற ஜெயசந்திரன் தலைமை வகிக்கிறார்.
இதில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், குமரி கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஏ.அசோகன், அதிமுக சிறப்புப் பேச்சாளர்கள் பாரதீயன், சி.பா. முருகன் ஆகியோர் பேசுகின்றனர்.