கல்லூரி மாணவியிடம் நகை திருட்டு

மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள ஞாறான்விளை பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் மகள் ஜோதி (18). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சனிக்கிழமை கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் மார்த்தாண்டத்திலிருந்து சிற்றுந்தில் வீட்டுக்கு திரும்பினார். ஞாறான்விளை பகுதியில் சிற்றுந்திலிருந்து இறங்கியபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்ததாம். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com