தமிழக அரசின் அனைத்து துறைகளின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி குலசேகரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இதில், கால்நடைத்துறையின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம், நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், சமூக நலத்துறையின் திருமண நிதியுதவி திட்டங்கள், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.