கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5.50 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை நடத்தப்பட்ட வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.