இயற்கை மருத்துவத்தின் மகத்துவம் மற்றும் போதை பழக்கத்தால் விளையும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் கடையாலுமூடு அருகேயுள்ள மருதம்பாறையில் நடைபெற்றது.
களியக்காவிளை, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி முதுகலை சமூக மேம்பாட்டுத் துறையும், கன்னியாகுமரி சமூக சேவை மையமும் இணைந்து நடத்திய இம்முகாமில், அருள்பணியாளர் அஜீஸ்குமார் தொடக்கவுரை நிகழ்த்தினார். மலங்கரை கல்லூரி சமூகப் பணித் துறை பேராசிரியர் பிரவின் ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினார். கன்னியாகுமரி சமூக சேவை மையத்தின் அருள்பணியாளர் எபி, கடையாலுமூடு பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர் ஆகியோர் பேசினர். ராணி, சுனிதா ஆகியோர் இயற்கை மருத்துவத்தின் பயன்கள் குறித்தும், துறை மாணவி சினி போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கருத்துரையாற்றினர்.
முதுகலை சமூகப் பணித் துறை மாணவி ஜெப ஷீலா வரவேற்றார். மாணவி ஆனந்தி நன்றி கூறினார். மாணவி அபிஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.