நாகர்கோவில் வல்லன்குமாரன்விளை பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மார்ச் 23) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின்வாரிய நாகர்கோவில் உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகர்கோவில் நகரப் பிரிவு வல்லன்குமாரன்விளை அலுவலகத்துக்குள்பட்ட கணேசபுரம் மின்பாதையில் உயர் அழுத்த மின்கம்பம் நிறுவும்பணி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சரலூர், செந்தூரன்நகர், இந்துக் கல்லூரி தெற்கு சாலை, ராமசாமி நகர், வள்ளலார் நகர், ஜீவா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 23) காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை தேவைக்கேற்ப மின்விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.