எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி குறுவட்டத்துக்குள்பட்ட 16 கிராம விவசாயிகளுக்கு மக்காச்சோள பயிருக்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். இதில், சங்க நிர்வாகிகள் நடராஜன், நம்பிராஜன், துரை, கோபால கிருஷ்ணசாமி, ராதாகிருஷ்ணன், ராமசாமி, பாலமுருகன், சுப்பையா மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.