மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் கடனுதவி

வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி காவிரி பெண்கள் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் அருள்மாறன் தலைமை வகித்தார். அமைப்பின் இயக்குநர் ஆரோக்கியம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வீரலட்சுமி வரவேற்றார். விளாத்திகுளம், நெட்டூர், ஆலங்குளம், திரேஸ்புரம், சாயல்குடி மற்றும் கீழஈரால் பகுதிகளைச் சேர்ந்த 82 பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்காக கடனுதவியாக ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில், அருள்தந்தைகள் சாம்சன் அமலதாஸ், அமலோபவராஜ், மார்ட்டின், நோபல், ரொசாரியோ, ஆரோக்கிய மான்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். லிங்கேஸ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com