திருச்செந்தூர் பகுதியில் மின் முறைகேடு: ரூ. 36,000 அபராதம் வசூல்

திருச்செந்தூர் கோட்டத்தில் மின் முறைகேடு  தொடர்பாக ரூ. 36 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

திருச்செந்தூர் கோட்டத்தில் மின் முறைகேடு  தொடர்பாக ரூ. 36 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது குறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - திருச்செந்தூர் கோட்டத்தின் சார்பில்  ஆறுமுகனேரி விநியோக பிரிவில் மாதாந்திர கூட்டுக்குழு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் 6 மின்னிணைப்புகளில் மின்சாரம் தவறான முறையில் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு மொத்த இழப்பீட்டுத் தொகையாக ரூ.36,186 வசூல் செய்யப்பட்டது. மேலும் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்பட்ட மின்னிணைப்புகளில் இருந்து மின்சாரம் எடுத்து வணிக உபயோகம், வீடு கட்டுமானம் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், புதிதாக கட்டப்படும் வீடு மற்றும் கடைகளின் பணிக்கு தேவைப்படும் மின்சாரத்திற்கு சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய மின்னிணைப்பு பெறப்பட வேண்டும் என்றும், விவசாய மின்னிணைப்பையோ, வீட்டு மின்னிணைப்பையோ பயன்படுத்தி அதிலுள்ள கிணறு,   ஆழ்துளை கிணற்றிலுள்ள நீரை தொழிற்சாலைகள் மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விதிமீறல் ஏற்படின் மின்திருட்டுக்கான அபராதம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com