கோவில்பட்டியில் இன்று மாநில கால்பந்துப் போட்டி

கோவில்பட்டி கால்பந்துக் கழகத்தின் 30ஆவது ஆண்டு விழாவையொட்டி,  மாநில அளவிலான 100ஆவது

கோவில்பட்டி கால்பந்துக் கழகத்தின் 30ஆவது ஆண்டு விழாவையொட்டி,  மாநில அளவிலான 100ஆவது கால்பந்துப் போட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.18) நடைபெறுகிறது. 
இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். முதல் போட்டியை எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி பொருளாளர் மகேஷ் தொடங்கி வைக்கிறார். இறுதிப்போட்டியை காவல் துறை உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் 4  அணியினருக்கு சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அமைப்பின்  செயலர் தேன்ராஜா தலைமையில், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com