எள்ளுவிளையில் அபாய நிலையில் காணப்படும் பயணிகள் நிழற்குடையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் அழகப்பபுரம் ஊராட்சிக்குள்பட்ட எள்ளுவிளையில் பெரியதாழை - மணப்பாடு பிரதான சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாலும், மேற்கூரை பகுதியில் விரிசல் உண்டாகி மேல்பூச்சு விழுந்து வருகிறது. நிழற்குடை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இதை அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.