காயல்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், சுகாதார விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
காந்தி நினைவு நுழைவு வாயிலிலிலிலிருந்து தொடங்கிய இப்பேரணியை சமூக ஆர்வலர் கலாமி ஹாஜி கொடியசைத்து தொடங்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டத் தலைவர் காதர் முஹைதீன் தொடக்கவுரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலர் உஸ்மான் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் மைதீன் கனி, திருச்செந்தூர் தொகுதித் தலைவர் முஹம்மது உமர், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்டச் செயலர் சம்சுதீன் ஆகியோர் பேசினர்.
பேரணி பல்வேறு தெருக்கள் வழியாக சென்று சீதக்காதி திடலில் நிறைவடைந்தது. பேரணியின் போது விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அப்துர் ரஹ்மான் நன்றி கூறினார்.