பெரியார் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு,  பாண்டவர்மங்கலத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு,  பாண்டவர்மங்கலத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர்,  தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திங்கள்கிழமை மாலை அணிவித்தனர். 
அம்பேத்கர்,  தந்தை பெரியார் பதிப்பகம் சார்பில் பேராசிரியர் ராஜமாணிக்கம் தலைமையில்,  முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.  ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் சுவாமிதாஸ், ஆசிரியர்கள் வேலுச்சாமி மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
அனைத்துத் தொழிற்சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன்,  மதிமுக சார்பில் இளைஞர் அணி மாவட்டச் செயலர் விநாயகா ரமேஷ் தலைமையில், கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச்  செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் ,  ஆதித்தமிழர் பேரவை சார்பில்,  தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் முத்துக்குமார் தலைமையில்,  மாவட்ட அமைப்புச் செயலர் செந்தில்அரசு,  ஆதித்தமிழர் கட்சியின் மாவட்டச் செயலர் செண்பகராஜ்,  மாவட்டத் துணைச் செயலர் க.முத்துசாமி,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வடக்கு மாவட்டச் செயலர் கதிரேசன்  ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  
திருச்செந்தூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில்  பரமன்குறிச்சி,  சமத்துவபுரத்தில் உள்ள பெரியாரின்  சிலைக்கு  மாவட்ட அமைப்பாளர் சு.விடுதலைச்செழியன் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com